வெள்ளி, நவம்பர் 11, 2011

கச்சா எண்ணெய் வாங்க காசில்ல! - அடுத்த விலை உயர்வுக்கு அடிபோடும் எண்ணெய் நிறுவனங்கள்

எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் அதிகரித்து விட்டதால், டிசம்பர் மாதத்தில் கச்சா எண்ணெய் வாங்க பணம் இருக்காது என்று இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டன எண்ணெய் நிறுவனங்கள். இதன் மூலம் மேலும் மேலும் விலையை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. பணம் இல்லை என்று கூறுவதன் மூலம், இறக்குமதி தடைபடும் என்பதால் அடுத்தடுத்த மாதங்களில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் சப்ளை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்களான ஓஎன்ஜிசி, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து சுத்திகரித்து பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்கின்றன. அவற்றின் 2வது காலாண்டு (ஜூலை - செப்டம்பர் 2011) நிதி நிலை முடிவுகள் வெளியாகி வருகிறது. மிகப் பெரிய நிறுவனமான இந்தியன் ஆயில் இதுவரை இல்லாத அளவு ரூ.7,486 கோடி இழப்பை சந்தித்துள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் விலை குறைத்து (?!) விற்பதால் ஏற்பட்ட கடந்த 6 மாத இழப்பான ரூ.11,757 கோடியில் இதுவரை மத்திய அரசு எந்த இழப்பீடும் தரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது இந்த நிறுவனம் இதே நிலைதான் மற்ற 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. நஷ்டம் காரணமாக வங்கிகளில் கடன் பெற்று கச்சா எண்ணெய் இறக்குமதியை தொடர்ந்து வந்தன. இப்போது இந்தியன் ஆயிலின் வங்கி கடன் நிலுவை ரூ.73,000 கோடியை தாண்டி விட்டது. டீசல், மண்ணெண்ணெய், சமையல் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்த முடியாத நிலை மற்றும் கம்பெனியின் மோசமான நிதி நிலை காரணமாக வங்கிகள் இனி கடன் அளிக்க தயக்கம் காட்டுகின்றன. இதனால், நிதி நெருக்கடியில் எண்ணெய் நிறுவனங்கள் சிக்கியுள்ளதால் டிசம்பர் மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதி தடைபடும் என்று ஐஓசி தலைவர் படோலா நேற்று தெரிவித்தார். கச்சா எண்ணெய் இறக்குமதி தடைபட்டால் சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டி வரும். அதன் தொடர்ச்சியாக பற்றாக்குறை ஏற்பட்டு பெட்ரோல், டீசல், சமையல் காஸ், மண்ணெண்ணெய் சப்ளை அடுத்தடுத்த மாதங்களில் பாதிக்கப்படும் என்றார். ஆனால், பெட்ரோல் விற்பனையில் இவை அனைத்துமே நல்ல லாபம் ஈட்டுகின்றன. சில மாதங்களுக்கு முன் பெட்ரோல் விற்பனையில் கிடைத்த உபரி லாபத்தை வைத்து, டீசல் விற்பனை நஷ்டத்தை ஈடுகட்டுவதாகக் கூட தெரிவித்தன. ஆனால் இப்போது அனைத்திலுமே நஷ்டம் என்று கணக்கு காட்டுகின்றன. அதே நேரம், அரசு நிறுவனங்களுடன் போட்டி போட்டிக் கொண்டு பெட்ரோல், டீசல் விற்கும் ஷெல், எஸ்ஸார், ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் கொழுத்த லாபம் ஈட்டி வருகின்றன.

புதன், செப்டம்பர் 21, 2011

விண்டோஸ் 8 ஒரு பார்வை

Thanks to: tamilinternet-hi.blogspot.com
மைக்ரோசாப்ட் தன் அடுத்த ஓபரேட்டிங் சிஸ்டம் தயாரிப்பில் மிக வேகமாக ஈடுபட்டு வருகிறது. பல வலைமனைகளில் இதன் கட்டமைப்பு குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Building Windows 8 என்ற வலைமனையில் பல தகவல்கள் கிடைக்கின்றன.

விண்டோஸ் 95 சிஸ்டம் வந்த பின் பெரிய அளவிலான மாறுதல்களுடன் வர இருப்பது இந்த புதிய ஓபரேட்டிங் சிஸ்டமாகும். விண்டோஸ் 95 வெளியான போது டெஸ்க்டொப் கணணி பயன்பாடு தான் உச்சத்தில் இருந்தது.

மடிக்கணணிகள் சாதரண மக்கள் வாங்கிப் பயன்படுத்த முடியாத விலையில் அனைத்து நாடுகளிலும் இருந்தன. 
இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நுகர்வோர் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பான இயக்கத்தினை அனைத்து சாதனங்களிலும் எதிர்பார்க்கின்றனர்.


ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் மற்றும் ஐபேட் சாதனங்களில் உள்ள வசதிகளை பெர்சனல் கணணிகளிலும் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையிலான எதிர்பார்ப்புகளைச் சந்திக்கும் வகையில் விண்டோஸ் 8 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


எனவே புதிய தொடுதிரை தொழில்நுட்பம் கொண்டதாகவும், வழக்கமான பயன்பாடும் இணைந்ததாகவும் விண்டோஸ் 8 அமையும். இந்த சிஸ்டம் ஏ.ஆர்.எம். மற்றும் இன்டெல் சிப்கள் என இரண்டு வகை ப்ராசசர்களில் இயங்கும்.


தற்போது மைக்ரோசாப்ட் தரும் ஆன்லைன் வசதிகளான ஸ்கை ட்ரைவ், ஆபீஸ் 365 மற்றும் இலவச ஆபீஸ் இணைய அப்ளிகேஷன்களை ஒருங்கிணைப்பதாக அமையும். மற்ற சிறப்பு அம்சங்களாக, யு.எஸ்.பி.3 சப்போர்ட் மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பினைக் கூறலாம்.


தொடுதிரை வசதிக்கென பெரிய அளவிலான பேனல்களை விண்டோஸ் 8 திரையில் காட்டும். இதனை மவுஸ் கொண்டும் இயக்கலாம். வழக்கமான ஸ்டார்ட் பட்டன், டாஸ்க் பார் மற்றும் டெஸ்க்டொப் வகையறாவும் இதில் கிடைக்கும். தொடுதிரை தருவதன் மூலம் இப்போது வரும் டேப்ளட் பிசிக்களுடன், விண்டோஸ் போட்டியிட முடியும்.


மேலும் தன்னுடன் ஒப்பந்தம் கொண்டுள்ள சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தின் கட்டமைப்பினை வழங்கியுள்ளது. அவர்களும் தொடுதிரை அமைப்பில் இயங்கக் கூடிய அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரித்து வருகின்றன.


விண்டோஸ் எக்ஸ்புளோரரின் செயல்பாட்டில் அதிகக் கவனம் விண்டோஸ் 8 தொகுப்பில் காட்டப்படுகிறது. கொப்பி, மூவ், ரீ நேம், டெலீட் எனப் பல செயல்பாடுகளை நாம் அடிக்கடி இதில் மேற்கொள்கிறோம். இந்த ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு விண்டோவினை இதுவரை ஓபரேட்டிங் சிஸ்டம் தந்து வந்தது.


விண்டோஸ் 8 தொகுப்பில் இவை அனைத்தும் ஒரே விண்டோவில் இருக்கும். இதன் மூலம் பெரிய கோப்புகள், குறிப்பாக வீடியோ மற்றும் புகைப்பட கோப்புகளை எளிதாக ஒரே இடத்தில் கையாள முடியும். கோப்புகள் கொப்பி செய்யப்படும் போதும், நகர்த்தப்படும் போதும், எவ்வளவு பிட் டேட்டா மாற்றப்பட்டுள்ளது என வரைபடம் மூலம் தெரிய வரும்.


விண்டோஸ் விஸ்டாவில் தரப்பட்ட ரிப்பன் இன்டர்பேஸ் இதில் தரப்படுகிறது. இதன் மூலம் கோப்புகளை கையாள்வது எளிதாக இருக்கும் என்று தெரிகிறது. எக்ஸ்புளோரர் விண்டோவில் மூன்று டேப்கள் முக்கியமானதாக இடம் பெறும். அவை ஹோம், ஷேர் மற்றும் வியூ(Home, Share and View) ஆகும். இடது புறம் கோப்பு மெனு கிடைக்கும். ஹோம் டேப்பில், விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் மேற்கொள்ளப்படும் 84% செயல்களுக்கான கட்டளைகள் கிடைக்கும்.


ஒரு கோப்பை அதன் டைரக்டரிக்கான வழியுடன் கொப்பி செய்வதற்கு "Copy path" என்னும் கட்டளை இதில் தரப்படுகிறது. இந்த கட்டளையுடன் கோப்பு ஒன்றை இன்னொரு எக்ஸ்புளோரர் விண்டோவில் கொப்பி செய்யப்படுகையில் கோப்பை அணுகுவது எளிதாகிறது.ஷேர் என்னும் டேப்பின் கீழ் மின்னஞ்சல் மற்றும் ஸிப் கட்டளைகள் கிடைக்கின்றன. பர்ன் டு டிஸ்க் (Burn to Disc), பிரிண்ட் மற்றும் பேக்ஸ் ஆகியவையும் இதில் உள்ளன.


புதிய கோப்பு மெனு மூலம் கமாண்ட் ப்ராம்ப்ட் கிடைக்கிறது. இன்னொரு எக்ஸ்புளோரர் விண்டோ மூலம், ஹார்ட் ட்ரைவினை பார்மட், ஆப்டிமைஸ், கிளீன் அப் போன்ற செயல்களை மேற்கொள்ளலாம். பிளாஷ் ட்ரைவ் ஒன்றை வெளியில் எடுக்க ஆட்டோ பிளே இயக்க இங்கு கட்டளையிடலாம்.இன்னும் தொடர்ந்து பல புதிய கட்டளைகளையும் வசதிகளையும் உள்ளடக்கியதாக விண்டோஸ் 8 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.